மேலும் 97 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்தனர்!
உக்ரைனைச் சேர்ந்த மேலும் 97 சுற்றுலாப் பயணிகள் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் உரிய சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக அவர்கள் நாட்டிற்குள் அழைத்துவரப்பட்டனர் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 180 சுற்றுலாப்பயணிகளுடன் இலங்கைக்கான முதல் உக்ரேனிய பயணிகள் விமானம் டிசம்பர் 28ஆம் திகதி மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியிருந்தது.
அவர்களில் இதுவரையில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நோயாளிகள் அனைவரும் அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என சுகாதார அமைச்சின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை