புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்!
இந்தவார இறுதியில் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை 19 ஆக அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக பிரதான ரயில் பாதையில் 6 ரயில்களும், கரையோர ரயில் பாதையில் 7 ரயில்களும், புத்தளம் ரயில் பாதையில் 3 ரயில்களும் சேவையில் ஈடுபடவுள்ளன.
அத்தோடு களனிவெளி ரயில் பாதையில் 2 ரயில்களும், வடக்கு ரயில் பாதையில் 1 ரயிலும் இன்றும் நாளையும் சேவையில் ஈடுப்படும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இருப்பினும், தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் தெமட்டகொட ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்படமாட்டாது என்றும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை