பல்கலை விடுதியில் கொரோனா தொற்று நோயாளி!
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர் பல்கலை விடுதியிலே தங்கி இருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட மூவரில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக அழைத்து சொல்லப்பட்டுள்ள போதும் மற்றொருவர் இரண்டு நாட்களாக தொடர்ந்தும் தங்கி இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்மாதம் 6ஆம் திகதி திருகோணமலை வளாகத்திற்கு தாம் வருகை தந்ததாகவும் அவ்வாறு வரும்போது எந்த விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்க பட்டிருக்கவில்லை எனவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
மேலும் அனைத்து மாணவர்களும் பொது மலசல கூடங்களை பயன்படுத்துவதாகவும் உணவு உண்ணும் அறையில் தாம் ஒன்று கூடுவதன் காரணமாக தம்மை தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தாம் போராடி வருவதாகவும் மாணவர்கள் விசனம் தெரிவித்தனர்
இதனால் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு இதற்கான தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பல்கலைக்கழக மாணவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை