இந்தோனேசிய விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டது!


கடந்த வார இறுதியில் ஜாவா கடலில் விபத்துக்குள்ளான இந்தோனேசியாவின் ஸ்ரீவிஜய எயார் விமானத்தில் இருந்த கருப்பு பெட்டிகளில் ஒன்றை இந்தோனேசிய அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் கருப்புப் பெட்டியின் பதிவுசெய்யும் சாதனம் ஜகார்த்தாவின் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இந்தோனேசிய கடற்படை செய்தித் தொடர்பாளர் ஃபாஜர் ட்ரி ரோஹாடி (Fajar Tri Rohadi)இன்று தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட கருப்புப் பெட்டி, விமானத்தின் விமான தரவு பதிவா என்பது உடனடியாகத் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜகார்த்தாவின் பிரதான விமான நிலையத்திலிருந்து 62 பேருடன் பயணித்த இந்தோனேசியாவின் போயிங் விமானம் கடந்த சனிக்கிழமை ஜாவா கடலில் வீழ்ந்து மூழ்கியமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.