பிரித்தானியாவில் நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு அதிகரிப்பு!


பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

இதன்படி, கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 62ஆயிரத்து 322பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 1041பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பிரித்தானியாவில் பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 5ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால், 28இலட்சத்து 36ஆயிரத்து 801பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதுவரை பிரித்தானியாவில் 77ஆயிரத்து 346பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டாயிரத்து 645பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.