மாஸ்டர் படம் குறித்து நடிகர் சூரி கூறிய மாஸ் கருத்து!!

 


தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படம் உலகம் முழுவதும் இன்று திரைக்கு வந்து உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக வேண்டிய இந்தப் படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போய் தற்போது திரைக்கு வந்து இருக்கிறது. தமிழ் ரசிகர்கள் 9 மாதங்களுக்கு பிறகு இந்தப் படத்தை முதன் முதலாக திரையில் பார்த்து ரசிக்கின்றனர். அதேபோல கேரளாவிலும் இந்தப் படம் பல மாதங்களுக்கு பிறகு நாளை திரைக்கு வரவிருக்கிறது.


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து உள்ளார். தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து இருக்கிறார். இன்று காலை 4 மணிக்கே இந்தப் படத்தின் முதல் காட்சி வெளியாகி அதன் விமர்சனங்களும் தற்போது பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல இடங்களில் ரசிர்கள் மாஸ்டர் பட போஸ்ட்டுக்கு பால் அபிஷேகம் மற்றும் கோகோ கோலா அபிஷேகம் என அல்ட்ராசிட்டி காட்டி வருகின்றனர். திரை விமர்சகர்களும் இந்தப் படத்துக்கு நல்ல கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.


மேலும் ரசிகர்களிடம் காணப்படுகின்ற வரவேற்பை பார்க்கும்போது படம் பட்டையை கிளப்பப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்நிலையில் மாஸ்டர் படத்தை மதுரையில் உள்ள ஒரு தியேட்டரில் முதல் ஷோவாகப் பார்த்த நடிகர் சூரி தன்னுடைய கருத்தை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டு உள்ளார். அதில், படம் நன்றாக இருக்கிறது என்றும் விஜய்யும் விஜய் சேதுபதியும் கலக்கி இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி இருப்பது சந்தோஷமாக இருக்கிறது என்றும் தெரிவித்து உள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.