வவுனியாவில் வெடிபொருட்கள் மீட்பு!


 வவுனியா – கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதிரங்குளம் குளப்பகுதியிலிருந்து ஆர்பீஜி செல் மற்றும் கைக்குண்டு என்பன நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் உள்ள குளத்திற்கு அருகாமையில் வெடிபொருள்கள் இருப்பது தொடர்பாக இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குறித்த பகுதியை சோதனையிட்ட நிலையில் ஆர்பீஜி செல் ஒன்றினையும், கைக்குண்டு ஒன்றினையும் மீட்டுள்ளனர்.

நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த வெடிபொருட்கள் இன்று செயலிழக்கச் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.