இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் சந்திப்பு!


இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரையும் எஸ். ஜெய்சங்கர் இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இதன்போது உயர்மட்ட பரிமாற்றங்கள் மூலம் இரு தரப்பினரும் பல துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளனர்.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் கீழ் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று மாலை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.