பெண்ணொருவரின் சங்கிலி அறுப்பு!


 வவுனியா – சாந்தசோலை பகுதியில் பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

சாந்தசோலையில் வியாபார நிலையம் ஒன்றை நடாத்தும் பெண் ஒருவர் நேற்றைய தினம் இரவு கடையில் தனிமையில் இருந்துள்ளார்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் அவரது வியாபார நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்வது போல பாசாங்கு செய்து விட்டு அவர் அணிந்திருந்த இரண்டு பவுண் தங்க சங்கிலியை அறுத்து சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் அயலவர்களிற்கு தெரிவித்ததுடன், சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை , கடந்த முதலாம் திகதியும் வவனியா நகர் பகுதியில் தங்கச்சங்கிலியை அறுத்துச்சென்ற இருவரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் கைது செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.