சொக்லேற் கனவுகள் 9 - கோபிகை!!
அவள் உள் மனதில்
உதித்த பதற்றம்
முகத்தின் வழியே
வழிந்ததோ என்னவோ,
'ஏய்....என்னடி......நடக்குது,
ஏன் இப்பிடி இருக்கிறாய்,?'
என்றான் ஆதித்தன்,
சற்று கண்டிப்புடனே.....
'எ....எ...எப்பிடி?'
பதிலுக்கு கேட்டாலும்
உள்ளுக்குள் புதிரிந்தது
அனுதிக்கு.
'அதான்.....அது.....
ஏதோ சொல்லுவினமே,
'பேயறைஞ்ச மாதிரின்னு'
அப்பிடி இருக்கிறாய்',
அவன் சொல்ல,
'போடா,அப்பிடி ஒண்டுமில்லை,'
அவள் சொல்லிவிட்டாலும்
சமாதானமாகவில்லை, அவன்
பார்வைகள் துளைத்தது.
கனிகாவின் மீதான
ஆதியின் ஈர்ப்பு
தெரிந்தது தானே,
பின் ஏன் இப்படி
மனம் பதைக்கிறது,
தன்னையே கேட்டாள்
அனுதி.
அதே கேள்விதான்
ஆதிக்கும்,
அனுதி இப்படி பயந்துபோய்
நான் கண்டதேயில்லையே,
மனதில் குடைச்சல்.
இருவரும் சிந்தனையோடு
நடந்து கொண்டிருக்க,
தூரத்திலே வரும்போதே
இவர்களைக் கண்டுவிட்ட
கனிகாவின் பார்வை
கனிந்து பின் கடினமானது.
பூத்தூவலாய் கிளர்ந்த காதல்
புஸ்வாணமாய் மடிந்துபோனது,
ஆதியை தனியே எதிர்பார்த்தவள்,
அனுதியைக் கண்டதும்
சினத்தில் சிவந்தாள்.
கனவுகள் தொடரும்
கோபிகை.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை