திருமணமான தம்பதிக்கு கொரோனா!!

 


புதிதாக திருமணமான தம்பதிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்த 100 பேரை குடும்பத்தினருடன் தனிமைப்படுத்த சுகாதார பிரிவு துரித நடவடிக்கைகளை எடுத்துள்ளது.


இந்த சம்பவம் கடுவெல பாதுகக்க வட்டாரேக்க ஆகிய பகுதிகளில் திருமணவிருந்துபசார நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர்.


இதில் கலந்துகொண்டவர்களையே தனிமைப்படுத்தலை முன்னெடுக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


இதன் பின்னர் அந்த தம்பதியினர் தேனிலவிற்கு நுவரேலியா சென்றுள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அதிகாரிகள் அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையின் போது தம்பதிகள் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது.


இதனையடுத்து விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்டவர்களை மிகுந்த சிரமதத்தின் மத்தியில் அடையாளப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அதிகாரி பெருமளவு மக்கள் கலந்துகொள்ளும் திருமண நிகழ்வுகள் போன்றவற்றை நடத்தும் போது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.


மேலும் ஹோமகமவில் இவ்வாறான சம்பவம் இடம்பெறுவது முதல்தடவையில்லை என கூறிய அதிகாரிகள், சமீபத்தில் இன்னொரு விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.