32 பாடசாலைகள் கிழக்கில் ஆரம்பிக்கப்பட மாட்டாது!!

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தைக் கடந்துள்ளது.


இந்நிலையில் கிழக்கு மாகாணத்திலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்த முக்கிய 6 பகுதிகளை அபாயவலையமாக அறிவித்துள்ளனர்.


இந்த நிலையில் இன்று பல பகுதிகளில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளபோதும் 32 பாடசாலைகள் ஆரம்பிக்கப்படமாட்டாது என நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.


கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.


அதன்படி, காத்தான்குடி பிரதேசத்தின் 25 பாடசாலைகளும் கல்முனை கல்வி வலயத்தின் 5 பாடசாலைகளும் திருக்கோயில் பிரதேசத்தில் ஒரு பாடசாலையும் மற்றும் அம்பாறையில் ஒரு பாடசாலையும் என 32 பாடசாலைகள் நாளை ஆரம்பமாக மாட்டாது என அவர் அறிவித்துள்ளார்.


மாகாண ஆளுனர் மற்றும் மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் வலயக் கல்வி அதிகாரிகளுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் அடிப்படையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.