யாழ். பரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா!!

 


யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

இதன்படி யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் 248 பேருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் கொழும்பிலிருந்து தப்பி ஓடிவந்த 11 பேரில் பூநகரியை சேர்ந்த 7 பேருக்கும், யாழ்.மருதங்கேணியை சேர்ந்த 2 பேருக்கும், சங்கானை பகுதியை சேர்ந்த ஒருவருக்குமாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.


இதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலையில் 441 பேருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் உடுவில் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.