முன்னாள் அரச அதிபர் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராகிறார்!!

 


வடமாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை களமிறக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இலங்கைத் தமிழரசுக் கட்சியில் தீர்மானம் எடுப்பதில் செல்வாக்குச் செலுத்தவல்ல அரசியல் பிரமுகர் ஒருவருக்கும், நாகலிங்கம் வேதநாயகனுக்கும் இடையில் அண்மையில் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


எனினும், அவருடன் பேச்சுவார்த்தையை நடத்திய அரசியல் பிரமுகர், வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சேவையாற்றியுள்ளமை, அனைத்து மாவட்ட மக்களிடத்தில் காணப்படுகின்ற நன்மதிப்பு ஆகியன தொடர்பில் எடுத்துக்கூறியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.



அத்துடன், வடமாகாண சபையின் ஆட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தக்கவைப்பதாக இருந்தாலோ அல்லது தனித்து ஆட்சி அமைப்பதாக இருந்தாலோ இவ்வாறு துறைசார்ந்த ஒருவரே வேட்பாளராக களமிறக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் குறித்த அரசியல் பிரமுகர் எடுத்துரைத்துள்ளார்.


இந்நிலையில், வேதநாயகன் தான் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ள அதேநேரம், வேதநாயகனின் தந்தையார் நாகலிங்கம் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவராக இருந்தமையும் அவருக்கு மேலதிக சாதக நிலைமையாக உள்ளதாக கூறப்படுகின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.