எம்ஜிஆர் உடனான மலரும் நினைவுகளை பகிர்ந்த நடிகை ராதா!
முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் 104வது பிறந்த நாள் நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பதும் அரசியல் தலைவர்களும் திரையுலக பிரமுகர்களும் எம்ஜிஆர் பிறந்த நாளை நினைவு கூர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் எம்ஜிஆர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்திற்கு பல திரையுலக பிரமுகர்கள் நேரில் சென்று அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கமல் ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ராதா எம்ஜிஆர் உடனான தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
எம்ஜிஆர் குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’எம்ஜிஆர் பிறந்த நாளில் ஒரு உண்மையான தலைவரை நாங்கள் நினைவு கூறுவதில் பெருமைப்படுகிறோம். எம்ஜிஆர் அவர்கள் முதல்வராக இருந்தது இந்த மாநிலத்திற்கு கிடைத்த ஒரு அதிர்ஷ்டமாக கருதுகிறேன். குறிப்பாக சென்னையில் எங்களுடைய ஏ.ஆர்.எஸ் ஸ்டூடியோவை அவர் திறந்து வைத்ததில் எங்களுக்கு மிகப்பெரிய பெருமை. அவரைப் போன்ற ஒரு தலைவரை நாடு இனிமேல் பார்க்குமா என்பது சந்தேகமே’ என்று எம்ஜிஆர் குறித்து நடிகை ராதா பதிவு செய்துள்ளார்.
மேலும் எம்ஜிஆருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் நடிகை ராதா பதிவு செய்திருந்தார் என்பதும் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை