இலங்கைக்கு உக்ரைன் சுற்றுலாக் குழுவினால் அபாயம்!!
இலங்கைக்கு வந்துள்ள யுக்ரைன் சுற்றுலாக் குழுக்களினால் நாட்டில் தொற்று பரவக்கூடிய சாத்தியம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
யுக்ரைனிலிருந்து அந்நாட்டு சுற்றுலாக்குழு அழைத்துவருகையில் ஒருசில முறைகள் பின்பற்றப்படவில்லை என்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
மேலும் யால பூங்காவுக்கு சென்ற யுக்ரைன் நாட்டவர்கள் குறைந்த பட்சம் முகக்கவசத்தைக்கூட அணிந்திருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை உலக நாடுகளில் கொரோனா தீவிரமாகப் பரவிவரும் நாடுகளின் பட்டியலில் யுக்ரைன் 17வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அந்நாட்டில் தினமும் ஆயிரக்கணக்கான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக யுக்ரைன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை