டாக்டர் சாந்தாவின் மறைவு குறித்து சூர்யாவின் டுவீட்!

 


சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் தலைவராக இருந்த டாக்டர் சார்ந்த அவர்கள் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டாக்டர் சாந்தாவின் மறைவு குறித்து பிரதமர் மோடி உள்பட பல முன்னணி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர் என்பதும், திரை உலகில் உள்ள பல நட்சத்திரங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர் என்பது தெரிந்ததே. நேற்று டாக்டர் சாந்தாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் சற்று முன்னர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா டாக்டர் சாந்தாவின் மறைவு குறித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கடவுள் மனிதராக அவதாரம் எடுப்பதாக இதிகாசங்கள் கூறுகின்றன; மனிதர் கடவுளாக முடியும் என்பதை மருத்துவர் அம்மா வி. சாந்தா அவர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார்; அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அதற்கு காலத்தின் சாட்சி; மனம் உருகும் அஞ்சலி! என்று கூறியுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.