ஒரேநாளில் 2 திருமணம் செய்துகொண்ட மாமனிதர்!!

 


ஒன்னுக்கே வழியில்ல எனப் புலம்பும் 90 ஸ் கிட்கஸ்களுக்கு மத்தியில் விவசாயி ஒருவர் ஒரே நாளில் 2 திருமணம் செய்து கொண்ட விசித்திரம் நடைபெற்று இருக்கிறது. இத்திருமணத்தை 2 பெண்களும் ஒப்புக் கொண்டதுதான் மேலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சட்டீஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஜகதல்பூர் கிராமத்தில் வசித்து வரும் விவசாயி சந்து மவுரியா. இவர் ஒரே நாளில் மிகப் பிரம்மாண்ட விருந்து வைத்து 2 பெண்களை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.


விவசாயி சந்து மவுரியாவுக்கும் சத்தாரி எனும் பெண்ணிற்கும் இடையில் செல்போன் மூலமாக காதல் மலர்ந்து இருக்கிறது. இந்தக் காதல் தொடரும்போதே மவுரியா தன்னுடைய உறவினர் வீட்டு திருமணம் ஒன்றிற்கு சென்று இருக்கிறார். அங்கு ஹசீனா எனும் பெண்ணை பார்த்து இருக்கிறார். அவரோடும் மவுரியாவிற்கு காதல் ஏற்பட்டு இருக்கிறது.


இதையடுத்து அந்த 2 பெண்களிடமும் மவுரியா வெளிப்படையாக தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்து இருக்கிறார். இதனால் சந்து மவுரியா, சத்தாரி, ஹசீனா ஆகிய 3 பேரும் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு செய்து உள்ளனர். இப்படியே சென்ற ஒரு வருட காதல் வாழ்க்கைக்குப் பிறகு இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து உள்ளனர். இதனால் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி ஊரைக்கூட்டி ஒரே மேடையில் இரண்டு பெண்களுக்கும் தாலி கட்டி இருக்கிறார் சந்து மவுரியா. இவரது திருமணத்திற்கு 600 க்கும் மேற்பட்டோர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் திருமணத்திற்கு வந்த பெரும்பாலானோருக்கு வயிற்று எரிச்சல் வராமல் இருந்திருக்காது என்பதும் கசப்பான உண்மைதான்.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.