இலங்கையர்கள் 9 மில்லியன் பேருக்கு தடுப்பூசி!


 இலங்கை சனத்தொகையின் 9 மில்லியன் பேருக்கு தேவையான ஒக்ஸ்போர்ட் எச்ட்ரா செனெகா தடுப்பூசியை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதுடன் 30 வயதிற்கும் 60 வயதிற்கும் உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

30 வயதிற்கும் 60 வயதிற்கும் உட்பட்டவர்களே அதிகளவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.