2021ம் ஆண்டின் முதல் விண்வெளி பயணம்!


 2021ம் ஆண்டின் முதல் விண்வெளிக்கான பயணத்தினை இஸ்ரோ வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.

இன்று ஏவப்பட்ட PSLV -c51 ரொக்கெட் 19 முக்கிய செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு ஆந்திர மாநிலம் சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து விண்வெளி கொண்டு சென்றுள்ளது.

இன்று காலை சரியாக 10:30 மணிக்கு ஏவப்பட்ட இந்த ரொக்கெட் பிரேசிலின் 637 கிலோ எடைகொண்ட அமேஜோனியா செயற்கைக்கோளை கொண்டு சென்றுள்ளது. அத்துடன் புவியை கண்காணிக்கும் செயற்கைக்கோளும் அனுப்பப்பட்டுள்ளது.

பிரேசிலின் அமேஜோனியா செயற்கைக்கோள், அமேசான் காடுகளின் அழிவை கண்காணிக்கவும், அது குறித்த தகவல்களை பயனாளர்களுக்கு துல்லியமாக வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இதனுடன் IN-SPACe நிறுவனத்தின் செயற்கைக்கோள்களும், இஸ்ரோவின் 14 செயற்கைக்கோள்களும் என மொத்தமாக 19 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன.

IN-SPACe தொகுதியில், அமெரிக்காவின் ஸ்பேஸ் பிஇஇ, மெக்சிகோவின் தயாரிப்பில் உருவான நானோகனெக்ட் செயற்கைக்கோள்களும், ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா, யுனிட்டி சாட் சார்பில் 3 செயற்கைக்கோள் போன்றவை இந்த தொகுதியில் அடங்கியுள்ளது.

இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவன நியூஸ்பேஸ் இந்தியா சார்பில் முதல் முறையாக வர்த்தக ரீதியாக பிரேசிலின் செயற்கைக்கோள் ஏவப்படுகிறது.

இந்த பணியை சிறப்பாக செய்துள்ள பிஎஸ்எல்வியின் 53வது ரொக்கெட், புறப்பட்ட 17 நிமிடங்களில் பிஎஸ்4 என்ஜின் செயல்பாடு நிறுத்தப்பட்டு, பிரேசிலின் செயற்கைக்கோளை நிலைநிறுத்திவிடும்.

பின்னர், 58 நிமிடங்களுக்கு பின்னர் மீதமுள்ள 18 செயற்கைக்கோள்களையும் அடுத்த 4 நிமிடங்களில் நிலை நிறுத்தும். மொத்தமாக 2 மணி நேரம் 8 நிமிடம் பயணிக்கும் என்று சொல்லப்படுகின்றது.

நான்கு படிநிலைகளைக் கொண்ட இந்த பிஎஸ்எல்வி ரொக்கெட்டில், முதல் மற்றும் மூன்றாவது படிநிலைகளில் திட எரிபொருளும், இரண்டாவது மற்றும் நான்காவது படிநிலைகளில் திரவ எரிபொருளும் பயன்படுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.