கனடாவில் 24 மணிநேரத்தில் 3094 பேருக்கு பாதிப்பு!


 கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மூவாயிரத்து 094பேர் பாதிக்கப்பட்டதுடன் 58பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக எட்டு இலட்சத்து 58ஆயிரத்து 220பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 21ஆயிரத்து 865பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் , 30ஆயிரத்து 338பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 588பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இதுவரை எட்டு இலட்சத்து ஆறாயிரத்து 17பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.