கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் விரைவில்!!

 


இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஒக்ஸ்பேர்ட் எஸ்ட்ரா செனிகா கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்ட இலங்கையர்களுக்கு அதன் இரண்டாவது டோஸ், தமிழ் - சிங்களப் புத்தாண்டுக்குப் பின்னர் வழங்கக்கூடியதாக இருக்கும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.


அதற்கு தேவையான தடுப்பூசிகள் இலங்கைக்கு விரைவாக கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்த மாத இறுதிக்குள் கொவெக்ஸ் வசதியின் கீழ் உலக சுகாதார அமைப்பினால் 2 லட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்க இருப்பதாக பதில் கடமையாற்றும் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.