உபுல் தரங்க சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்க, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

‘நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்’ என்று தரங்கா டுவிட்டரில் செய்தியை உறுதிப்படுத்தினார்.

இடது கை துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்க, குறுகிய காலத்திற்கு இலங்கையின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். அவ்வப்போது விக்கெட் காப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

தரங்க, 2007ஆம் மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கிண்ண தொடரிலும் விளையாடியுள்ளார்.

2005ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம், மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான தரங்க, இறுதியாக கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை அணிக்காக விளையாடினார்.

15ஆண்டுகளுக்கு மேல் இலங்கை அணிக்காக விளையாடியுள்ள உபுல் தரங்க, இலங்கை அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் 8 அரைசதங்கள் அடங்களாக 1,754 ஓட்டங்களை குவித்துள்ளார்.

அத்துடன் 235ஒருநாள் போட்டிகளில் விளையாடி 15 சதங்கள் 37 அரைசதங்கள் அடங்களாக 6,951ஓட்டங்களை குவித்துள்ளார். 26 ரி-20 போட்டிகளில் 407 ஓட்டங்களை குவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.