தாயொருவர் தனது மூன்று வயது மகளுடன் தற்கொலை!


பிபில- பதுள்ளகம்மன பகுதியைச் சேர்ந்த தாயொருவர், தனது 3 வயது மகளுடன் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு, குடும்ப பிரச்சினை காரணமாவே  அவரது மகளுடன் 24 வயதுடைய தாய் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீட்டுக்கு அண்மையிலிருந்த 40 அடி ஆழமான கிணற்றில்,  தாய் மற்றும் மகளின் சடலங்கள் இருப்பதை கண்ட உறவினர்கள், பிபில பொலிஸாருக்கு இன்று தகவல் வழங்கியுள்ளனர்.

இதேவேளை  சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணுக்கும் இராணுவத்தில் பணி புரியும் அவரது கணவருக்குமிடையில் தொலைபேசியின் மூலம் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும், அதன் பின் குறித்த பெண் மற்றும் குழந்தையை காணவில்லையென அந்த சந்தர்ப்பத்தில் வீட்டிலிருந்த பெண், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த  கிணற்றில் இருந்த இருவரினது சடலங்களும் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.