தற்காலிகமாக கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் மூடல்!


கொரோனா தொற்று பரவல் காரணமாககிழக்கு மாகாண கல்வி திணைக்களம் தற்காலிகமாக மூடல், மாகாணப் கல்விப் பணிப்பாளருக்கு கொரோனா தொற்று இல்லை, கிழக்கு மாகாண கல்வி திணைக்கள நிருவாக பிரிவில் பத்து பேருக்கு கொவிட்- 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக கிழக்கு மாகாண கல்வி திணைக்கள நிருவாக பிரிவு தற்காலிக மூடப்பட்டுள்ளதாக மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.டி.ஏ.நிசாம் இன்று தெரிவித்தார்.

கடந்த 10 ம்திகதி கிழக்கு மாகாண கல்விதிணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் கொரோ

னா தொற்றுக்கு உள்ளாகியதை அடுத்து நடாத்தப்பட்ட அன்ரிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகளின் போது மேலும் பத்து பேருக்கு கொவிட்-19 உறுதிசெய்யப்பட்டதை அடுத்து தொற்று உறுதியானோர் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஏனைய உத்தியோகத்தர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளைமாகாண கல்வி பணிப்பாளரை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை(Negative) எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.டி.ஏ.நிசாம் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.