தற்கொலைக்கு முயன்ற இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!


தாயின் கண் முன்னே தனக்கு தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயற்சித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம்- உரும்பிராய் ஜபகுதியை சேர்ந்த கோ.கவிதாஸ் (வயது 34) என்பவரே இவ்வாறு  உயிரிழந்தவராவர்.

கடந்த 28ஆம் திகதி வீட்டில் தாயாருடன் ஏற்பட்ட முரண்பாட்டினை அடுத்து, தனது உடலில் மண்ணெணெய் ஊற்றி, தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதன்போது தீக்காயங்களுக்கு உள்ளாகி படுகாயமடைந்தவரை மீட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் வீட்டார் அனுமதித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அவர், அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.