மனித உரிமைகள் பேரவையில் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் தயார்!


மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தயாராக உள்ளது என அரச தரப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெலிகமவில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த டி சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் இலங்கை போன்ற வளரும் நாடுகளின் முன்னேற்றத்தில் தலையிடுவதற்கு என பல சர்வதேச அமைப்புகள் செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் மனித உரிமைகள் பேரவை முன்வைக்கும் கேள்விகளுக்கு அரச தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி பதிலளிப்பார் என்றும் படையினர் மற்றும் நாட்டின் இறையாண்மையையும் அவர் பாதுகாப்பார் என்றும் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த டி சில்வா குறிப்பிட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.