நுவரெலியா உட்பட பல பகுதிகளில் எதிர்வரும் 5ஆம் திகதி ஹர்த்தால்!


தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக தற்போதைய அரசாங்கம் நிர்ணயித்தாலும் பெருந்தோட்டக் கம்பனிகள் அதை அதிகரிக்கத் தயாராக இல்லை என்பதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு எதிராக ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

எதிர்வரும் 5ஆம் திகதி நுவரெலியா மாவட்டம் உட்பட அனேக பிரதேசங்களில் இவ்வாறு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே அனைத்துக் கடைகளும் மூடப்படுவதுடன் டாக்ஸி, முச்சக்கரவண்டிகள் இயக்கப்படாது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஹர்த்தால் பிரசாரம் அரசாங்கத்துக்கு எதிரானது அல்ல என்றும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிரானது எனக் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.