இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நில அதிர்வு!


இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தஜகிஸ்தான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட மத்திய ஆசிய நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தஜகிஸ்தானிலுள்ள முர்காப் என்ற இடத்தை மையமாகக் கொண்டு பூமிக்கடியில் 92 கிலோ மீட்டர் ஆழத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6 புள்ளி 3 ஆக பதிவானது. இந்நிலையில் தஜகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளிலும் உணரப்பட்டன. இருப்பினும் நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்து இதுவரை எந்ததொரு தகவலும் வெளியாகவில்லை.

இந்தியாவில் காஷ்மீர், பஞ்சாப், டெல்லி, ஹரியானா, உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனைக் கண்ட மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு பொதுவெளியில் தஞ்சமடைந்ததாக இந்திய ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.