ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்றார் பழனிசாமி!


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு தீபம் ஏற்றி முதல்வர் பழனிசாமி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் ஜெயலலிதா படத்திற்கு முன்பு தீபம் ஏற்றி குடும்ப உறுப்பினர்களுடன் முதல்வர் பழனிசாமி உறுதிமொழி ஏற்றார்.

இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அ.தி.மு.க.வினர் தீபம் ஏற்றி அ.தி.மு.க.வைக் காப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

ஜெயலலிதா வழியைப் பின்பற்றி சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.விற்காக உழைக்கும் வகையில் அனைவரும் வீடுகளில் தீபம் ஏற்றி உறுதிமொழி எடுக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமிஅறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.