வங்கி கணக்கில் நூறு கோடி ரூபாய் பணம் - அதிகாரிகள் பரபரப்பு!!


 யாழ்.மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த இளைஞனின் வங்கி கணக்கில் சுமார் பல நூறு கோடி ருபாய் பணம் கனடாவில் இருந்து வைப்பிலிடப்பட்டுள்ளமை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந் நிலையில் குறித்த இளைஞனுக்கு தெரிந்த யாரேனும் ஒருவர் இணைய வங்கி ஊடாக சுருட்டிய பணம் இவ்வாறு வைப்பிலிடப்பட்டிருக்கும் என்ற கோணத்தில்புலனாய்வு பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சுமார் 490 கோடி கனேடியன் டொலர் என்ற அடிப்படையில் 4 தடவைகளுக்கு குறையாமல் இவ்வாறு குறித்த இளைஞனின் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

இந்த பணம் இலங்கைக்குள் அனுமதிக்கப்பட்டால் இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடையும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த பணத்தை நாட்டுக்குள் அனுமதிப்பது தொடர்பாக மத்திய வங்கியும், புலனாய்வு பிரிவும் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் குறித்த இளைஞன் மத்திய வங்கியுடன் தொடர்பு கொண்ட நிலையில் கிராம சேவகர் ஊடாகவும், பிரதேச செயலர் ஊடாகவும் அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை மறுபக்கம் அரசியல் பின்புலம் உள்ள சிலரும், போலி ஊடகவியலாளர்கள் சிலரும் குறித்த பணத்தை கிளியர் பண்ணி தருவதாக கூறி இளைஞனை சுற்றி வருவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.