முன்னணி நிறுவனம் ஒன்று 'கே.ஜி.எஃப் 2' இன் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றது!

 


பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த ’கேஜிஎப்’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது. தமிழ் தெலுங்கு இந்தி மலையாளம் கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஜூலை 16ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்தே.


இந்த நிலையில் இந்த படத்தின் வியாபாரம் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தமிழக ரிலீஸ் உரிமையை தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து தமிழில் இந்த படம் பிரமாண்டமாக அதிக திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டண்டன், சஞ்சய்தத் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரவிபஸ்ரூர் என்பவர் இசையமைத்துள்ளார். சுமார் 120 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்தப் படம் முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் மிகப் பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.