சிறிய தந்தையால் 13 வயது சிறுமி வன்புணர்வு!


யாழ்.ஆனைக்கோட்டை பகுதியில் சித்தி வீட்டில் பாதுகாப்பிற்காக விடப்பட்டிருந்த 13 வயதான சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டில் சிறுமியின் சிறிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சிறுமியின் சித்தி கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரை மானிப்பாய் பொலிஸார் குறித்த கைது செய்திருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.

சிறுமியின் பெற்றோர் முல்லைத்தீவில் வாழ்ந்துவரும் நிலையில் சிறுமியின் கல்விக்காக சித்தி வீட்டில் பாதுகாப்பிற்காக விடப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு, சிறுமி மீது தனது கணவர் வன்புணர்வு புரிந்ததாக முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருப்பதுடன், சிறுமியை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தவும், சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.