அவுஸ்ரேலியாவை பந்தாடியது நியூஸிலாந்து!


அவுஸ்ரேலியா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 53 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கோன்வே ஆட்டமிழக்காது 99 ஓட்டங்களையும் க்ளென் பிலிப்ஸ் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், டேனில் சேம்ஸ் மற்றும் ஜெய் ரிச்சட்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஸ்டொயினிஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 185 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, 131 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் நியூஸிலாந்து அணி 53 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மிட்செல் மார்ஷ் 45 ஓட்டங்களையும் அஸ்டன் அகர் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், இஷ் சோதி 4 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தீ மற்றும் ட்ரென்ட் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கெய்ல் ஜேமீசன் மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 59 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 10 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 99 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட கோன்வே தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி, எதிர்வரும் 25ஆம் திகதி டுனெடின் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.