இலங்கையிலும் நில அதிர்வுகள் பதிவாகக்கூடும்!


இலங்கையிலும் இலங்கையை அண்மித்த பகுதிகளிலும் எதிர்காலத்தில் சிறிய அளவிலான நில அதிர்வுகள் பதிவாகக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று இலங்கைக்கு அருகில் கடல் ஆழத்தில் 4 ரிக்டர் அளவான நில அதிர்வு பதிவாகியிருந்தது.

இந்தோ-அவுஸ்ரேலிய புவித்தகட்டில் ஏற்பட்ட பிளவே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் எதிர்காலத்திலும் அவ்வாறான சிறிய நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் அவை நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்துவனவாக அமையாது என்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.