மியன்மார் மக்களுக்கு அளிக்கும் ஆதரவிலிருந்து பின்வாங்க மாட்டோம்!


மியன்மார் மக்களுக்கு நாங்கள் அளிக்கும் ஆதரவிலிருந்து பின்வாங்க மாட்டோம் என அந்நாட்டு இராணுவத்துக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராகவும் ஆங்சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் இராணுவம் விதித்துள்ள தடையை மீறி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தலைநகர் நேபிடா, யாங்கூன் மற்றும் மண்டலே நகரங்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகிறார்கள்.

இதனிடையே அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளங்கன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

‘நாங்கள் மியன்மார் மீது கூடுதலான நடவடிக்கைகளை எடுக்க தயங்க மாட்டோம். மியன்மார் மக்களுக்கு நாங்கள் அளிக்கும் ஆதரவிலிருந்து பின் வாங்க மாட்டோம். மியன்மார் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்.

ஊடகவியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள். ஜனநாயக அரசாங்கத்தை மீண்டும் கொண்டு வாருங்கள்’ என கூறினார்.

மேலும், மியான்மர் இராணுவத்தை சேர்ந்த மேலும் இரண்டு பேர் மீது திங்கட்கிழமை அமெரிக்க பொருளாதாரத் தடை விதித்தது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.