அனிருத்-கீர்த்தி சுரேஷ் திருமணமா!!
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அந்த கீர்த்தி சுரேஷை இசையமைப்பாளர் அனிருத் திருமணம் செய்ய இருப்பதாக வதந்திகள் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வதந்தி குறித்து கீர்த்தி சுரேஷின் பெற்றோர் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
அனிருத்தின் பிறந்தநாளன்று கீர்த்தி சுரேஷ் வாழ்த்து தெரிவித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை அடுத்து அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் கிளம்பின. இந்த வதந்திக்கு ஏற்கனவே அனிருத், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் பெற்றோர் தரப்பில் இருந்து இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கீர்த்தி சுரேஷ் திரைப்படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் என்றும் அவர் யாரையும் காதலிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது
கீர்த்தி சுரேஷ் நடித்த ’ரெமோ’ மற்றும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை