கிளிநொச்சி கல்வி வலையம் இரண்டாகப் பிரிகிறது!
கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிப்பதற்கான கல்வி அமைச்சின் எழுத்து மூலமான அனுமதியினை வட மாகாண ஆளுநரிடம் கல்வி அமைச்சலர் ஜி.எல்.பீரிஸ் நேற்றையதினம் கையளித்துள்ளார்.
யாழ் பல்கலைழக கிளிநொச்சி விவசாய பீடத்தின் ஆய்வு பயிற்சி கட்டடத் தொகுதியினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் , இதற்கான அனுமதி கடிதத்தையும் வட மாகாண ஆளுநரிடம் கையளித்துள்ளார்.
இதுவரை காலமும் கிளிநொச்சி மாவட்டம் கிளிநொச்சி கல்வி வலயம் என கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பளை என நான்கு கோட்டக் கல்வி பிரிவுகளாக 104 பாடசாலைகளுடன் 32028 மாணவர்கள் 2035 ஆசிரியர்கள் 28 உயர்தர வகுப்புகளைக் கொண்ட பாடசாலைகள், இயங்கி வந்தன.
இந்நிலையில் கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.
அத்துடன் அதற்கான முன்னேற்பாடுகள் மாவட்டம மற்றும் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது மத்திய கல்வி அமைச்சின் அனுமதியும் கிடைத்துள்ளது.
இதனையடுத்து இது தொடர்பில் அமைச்சரவைக்கு விடயம் கொண்டு செல்லப்பட்டு அங்கும் அனுமதி பெறப்பட்ட பின்னர் வலயப் பிரிப்புக்கான பணிகள் உத்தியோகப் பூர்வமாக முன்னெடுக்கப்படும் எனவும் கிளிநொச்சி கல்வி வலயம் தெரிவித்துள்ளது.
அதன்படி கரைச்சி பூநகரி ஒரு வலயமாகவும், பளை , கணடாவளை ஒரு வலயமாகவும் என இரண்டு வலயங்களா பிரிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை