வவுனியாவில் மாணவி தற்கொலை!


 வவுனியா கற்குழி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 16 வயது மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று வீட்டில் தனது தங்கையுடன் தனித்திருந்த சிறுமி, இந்த விபரீத முடிவை எடுத்தார்.

அவர் தூக்கில் தொங்கியிருப்பதை அவதானித்த அவரது தங்கை அயலவர்களிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தினை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கற்குழி பகுதியை சேர்ந்த சதுசியா (16) என்ற மாணவியே இவ்வாறு மரணமடைந்துள்ளார். அவர் எழுதியதாக தெரிவிக்கப்படும் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.