பேரணி தொடர்பில் யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!!

 


இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ள பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை எழுச்சிப் பேரணிக்கு மக்களை அணி திரட்டும் தீவிர முயற்சி யாழில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


இதற்காக பிரதான சந்தைகள், மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது.


இதில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், சுன்னாகம் பிரதேசசபை தவிசாளர் தர்ஷன், சசிகலா ரவிராஜ், க.குணாளன் உள்ளிட்டவர்கள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றும் இன்றும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.