மிரட்டும் 'டெடி' த்ரில் டிரைலர்!!

 


தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஆர்யா தற்போது ’டெடி’, ‘புஷ்பா’, ’எனிமி’ மற்றும் ’சல்பேட்டா’ ஆகிய நான்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் ’டெடி’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் ’டெடி’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி இன்று வெளியாகியுள்ள இந்த படத்தின் டிரைலரில் அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா மற்றும் அவரது மனைவி சாயிஷா நடித்த திரைப்படம் ’டெடி’. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து ஓடிடியில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.


டி இமான் இசையமைத்துள்ள இந்த படம் வரும் மார்ச் 12ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக சற்றுமுன் வெளியாகியுள்ள டிரைலரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. த்ரில் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் இயக்குனர் மகிழ்திருமேனி மற்றும் கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள இந்த படத்தின் டிரைலரில், ‘கோமாவில் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையில் இருப்பவர்கள் அவங்க உடம்பை விட்டு வெளியே வந்து அவங்களை அவங்களே பார்க்க முடியும் என்ற வசனத்துடன் தொடங்கும் இந்த படத்தின் டிரைலர் த்ரில்லின் உச்சமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.