இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனம் மூடும் நிலையில்!!

 




இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்தின் செய்திப் பிரிவு மூடப்படுவதற்கான நிலைமை ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஒலிபரப்பு கூட்டுதாபனத்தின் சிங்கள பிரிவில் கடமையாற்றும் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஒலிபரப்பு கூட்டுதாபனத்தில் கடமையாற்றும் ஊழியர்களை கட்டம் கட்டமாக பணிக்கு அமர்த்துமாறு சுகாதார பிரிவினர் ஆலோசனை வழங்கியிருந்த போதிலும், நிர்வாகத்தினர் அதனை கடைபிடிக்கவில்லை என அறிய முடிகின்றது.


இந்த நிலையில், கொவிட் தொற்றுக்குள்ளான குறித்த ஊடகவியலாளர் கடந்த வியாழக்கிழமை கடமைகளுக்காக சமூகமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இறுதியாக குறித்த ஊடகவியலாளர் கடமைக்கு சமூகமளிக்கும் போது, அவருக்கு காய்ச்சல் நிலைமை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளான இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ, அண்மையில் ஒலிபரப்பு கூட்டுதாபனத்திற்கு சென்று நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டுள்ளார்.


இராஜாங்க அமைச்சரின் ஊடாகவே, குறித்த ஊடகவியலாளருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுகின்றது.


இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் கொவிட் தொற்று கடந்த வாரம் உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.


குறித்த உயர் அதிகாரி தனிமைப்படுத்தப்பட்ட போதிலும், நிறுவனத்திற்குள் உரிய சுகாதார நடைமுறைகள் பேணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


மேலும் , சுகாதார நடைமுறைகளின் இன்றி, ஊழியர்களை கடமைகளுக்காக வெளியில் செல்ல நிறுவனம் வலியுறுத்துவதாக ஊழியர்கள் அங்கலாய்கின்றதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.