நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

 


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இன்றைய தினம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக பாராளுமன்ற படைக்கலச் சேவிதர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட அஸ்ரா செனேக்கா கொவிட் தடுப்பூசியே இவ்வாறு ஏற்றப்படவுள்ளது. 

அமைச்சர் சி.பி.ரட்நாயக்கவுக்கு ஏற்கனவே இந்த தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை. அனைத்து சிறைச்சாலைகளிலும் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கு இன்று முதல் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

சுமார் ஐயாயிரத்து 100 சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு இந்த தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.