கொரோனா தொற்றினால் உயிரிழந்த முதலாவது மருத்துவர்!


 கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மருத்துவரான கயான் தந்தநாராயண இன்று உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையிலேயே உயிரிழந்திருக்கின்றார்.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த முதலாவது மருத்துவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் கயான் தந்தநாராயண, ராகம வைத்தியசாலையில் பணியாற்றிவந்ததோடு கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.