தாயாரை அச்சுறுத்துவதற்காக செய்த விளையாட்டே வினையாக மாறியுள்ளது!

 


தீக்காயங்களுக்கு உள்ளான நபர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் உரும்பிராய் கிழக்கைச் சேர்ந்த கோபாலசுந்தரம் கவிதாஸ் (வயது 33) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டில் தாயாருடன் சண்டை பிடித்துவிட்டு தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தாயாரை அச்சுறுத்துவதற்காக செய்த விளையாட்டே வினையாக மாறியுள்ளது.

மேலும் கடந்த 28ஆம் திகதி இவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இறப்பு விசாரணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.