ஆர்ப்பாட்டத்திற்கு யாழ்ப்பாணத்திலும் தடையுத்தரவு!!

 


பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் என்ற பெயரிலான போராட்டத்திற்கு தடைவிதிக்க கோரி யாழ்ப்பாண பொலிசாரும் இன்று நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


தமிழ்மக்கள் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுவதை எதிர்த்தும், தமிழ் மக்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்களை உலகிற்கு உரத்து சொல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டது.


இப்போராட்டத்தின் தொடக்க புள்ளியாக கிழக்கில்- மட்டக்களப்பு- அம்பாறையில் கிட்டத்தட்ட பெரும்பாலான பொலிஸ் நிலையங்களினால் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு, வாழைச்சேனை, கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி போன்ற மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ்நிலையங்கள் மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தினாலும் நீதிமன்றத்தின் மூலம் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.


இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பல பொலிஸ் நிலையங்களினாலும் நீதிமன்ற தடையுத்தரவுகள் பெறப்படவுள்ளதுடன், தத்தமது பகுதிகளின் மூலம் பேரணி செல்வதற்கு எதிராக இந்த தடையுத்தரவுகள் பொலிஸாரினால் பெறப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.