எனது நண்பர்கள் ஏழ்மையில் வாடும் மக்களே!


இந்தியாவில் ஏழ்மையில் வாடும் மக்களே தனது நண்பர்கள் எனவும் அவர்களுக்காகவே தான் உழைப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது மோடி இவ்வாறு கூறியுள்ளார்.

பிரதமர் மோடி, பெரு முதலாளிகளின் நண்பர் என்றும் அந்த நண்பர்களுக்காக வாழ்வதாகவும் நாட்டை விற்றுக் கொண்டிருப்பதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இதற்கு தனது உரையில் பதிலளித்துள்ள பிரதமர் மோடி, “நான் எனது நண்பர்களுக்காக உழைப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. நாம் யாருடன் வளர்ந்தோமோ அவர்கள்தான் நமது நண்பர்கள்.

நான் வறுமையில் வளர்ந்தேன். ஆகையால், இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் வாழ்ந்துவரும் ஏழைகளின் நிலையை நான் அறிவேன். ஏழ்மையில் வாடும் மக்களே எனது நண்பர்கள். எனது நண்பர்களான அவர்களுக்காகத்தான் நான் உழைக்கிறேன். தொடர்ந்து உழைப்பேன்.

கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியபோது, எனது நண்பர்களுக்கு இலவச ரேசன் பொருட்கள், இலவச எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அவர்களின் வங்கிக் கணக்குகளில் நிதியுதவி வழங்கினேன்.

அத்துடன், உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியின் விலை அதிகமாக இருந்தது. ஆனால், எனது நண்பர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போட ஏற்பாடு செய்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.