குழந்தையை பயமுறுத்தி உணவூட்ட 119 க்கு அழைப்பு எடுக்காதீர்கள்- அஜித்ரோஹண!


பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119க்கு நாளொன்றுக்கு 1,800க்கு மேற்பட்ட அழைப்புகள்

கிடைப்பதாகத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன, இதில் பல விநோத அழைப்புகளும் வருவதாகத் தெரிவித்தார்.
இதற்கமைய, தமது குழந்தைகளுக்குப் பயமுறுத்தி உணவை ஊட்டுவதற்காக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்புகள் வருவதாகவும் தெரிவித்த அவர், வீட்டுக்குள் பாம்பு வந்துவிட்டதாக கூறியும் 119க்கு அழைப்பதாகவும் தெரிவித்தார்.
எனவே, இவ்வாறான அழைப்புகளை முன்னெடுக்காமல். அவசரமான விடயங்களுக்கு மாத்திரம் 119ஐ அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.