பிரேஸிலில் நாளொன்றுக்கான அதிகப்பட்ச உயிரிழப்பு பதிவானது!

 பிரேஸிலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், நாளொன்றுக்கான அதிகப்பட்ச உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரேஸிலில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,349பேர் உயிரிழந்ததோடு 80ஆயிரத்து 955பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேஸிலில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட மூன்றாவது நாடாக விளங்கும் பிரேஸிலில், இதுவரை ஒரு கோடியே 12இலட்சத்து ஐந்தாயிரத்து 972பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு இலட்சத்து 70ஆயிரத்து 917பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 10இலட்சத்து 21ஆயிரத்து 316பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் எட்டாயிரத்து 318பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 99இலட்சத்து 13ஆயிரத்து 739பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.