பிரான்ஸில் ஒன்றுதிரண்ட தமிழர்கள்!

அறப்போராளி அம்பிகை செல்வகுமாரின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் தமிழர்கள் ஒன்றுதிரண்டனர்.

கொவிட்-19 சட்டவிதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் உணர்வெழுச்சியுடன் அறப்போராளி அம்பிகைக்கு ஆதரவாக ஒன்றுகூடி தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

அம்பிகையின் 4 அம்சக் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக் கோரி, கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வீதியோரத்தில் நின்று ஆதரவுக்குரல்களை எழுப்பியிருந்தனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.